News December 22, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News December 30, 2025
திருப்பூரில் கூண்டோடு அதிரடி கைது

திருப்பூரைச் சேர்ந்தவர் சந்தனகருப்பன். இவர் தனது கைப்பேசி மூலம் இணைய வழியில் விளம்பரத்தை கண்டு பேசி, ரூ.53,000 பணம் கொடுத்துள்ளார். பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மும்பை சென்று மோசடி கும்பல் 13 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News December 30, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. வகுப்பில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.
News December 30, 2025
திருப்பூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.


