News January 8, 2025
திருப்பூரிலிருந்து 502 சிறப்பு பேருந்துகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகின்ற 10ஆம் தேதி முதல், தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்வதற்காக, 502 சிறப்பு பேருந்துகள், திருப்பூரிலிருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
திருப்பூர்: பனியன் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய பட்ஜெட் நேற்று தாக்கலான மறுநாளே இன்று திருப்பூர் பின்னலாடைக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 7 உயர்ந்துள்ளது. இது பின்னலாடைத்துறைக்கு பெரும் பின்னடைவாக பேசப்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க வரிவிதிப்பு 50% பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பத் குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
பிப்.05 திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 5-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்று, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவுபெறலாம். இந்த தகவலை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராயச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.


