News September 8, 2025
திருப்புவனம்: இடி தாக்கியதில் பெண் உரிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் சிவகாமி அம்மாள்(50). இவா், நேற்று மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்தப் பகுதியிலுள்ள சமையன் கோயில் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை அவிழ்ப்பதற்காகச் சென்றாா். அப்போது, இடி தாக்கியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Similar News
News September 8, 2025
காரைக்குடி வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

காரைக்குடி வழியாக ( வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு )எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் ( 06061 ) வரும் 10 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்தும் , வண்டி எண் ( 06062 ) 11 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தும் புறப்படும் இந்த இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்கள் காரைக்குடி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News September 8, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

சிவகங்கை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு<
News September 8, 2025
BREAKING: சிவகங்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2025 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள்/ கல்லூரிகள்/இதர கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.