News March 22, 2025
திருப்பரப்பு பகுதியில் அதிகபட்சமாக மழை பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பரப்பு பகுதியில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 7, அப்பர் கோதையார் 5, சிற்றாறு இரண்டு 4, கொட்டாரம் 3, சிற்றாறு ஒன்று 2, லோயர் கோதையார் , கல்லார் மற்றும் களியல் பகுதிகளில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News April 20, 2025
குமரி : காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் 2500 முதல் 3500 வரை ரூபாய் விலக்கு அளிக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தகவல் பெற அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம் என அறிவிப்பு.
News April 20, 2025
குமரி : தபால் துறையில் 453 கோடிக்கு காப்பீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு 13,000 வாடிக்கையாளர்கள் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூபாய் 178 கோடியும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய் 275 கோடியும் என மொத்தம் 453 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளனர் என்று கன்னியாகுமரி கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
News April 20, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9.30 மணி – பூதப்பாண்டி பேரூராட்சி ஈசாந்திமங்கலம் ஊராட்சி, இறச்சகுளம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியதை கண்டித்து இறச்சகுளம் சந்திப்பில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாலை மணி – வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டாறு பாவா காசிம் திடலில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.