News December 16, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து போராட்டம்: திருமா

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தங்களுக்கு வேண்டிய நீதிபதியை வைத்து மதவெறி கும்பல் பிரச்னையை கிளப்பியுள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். RSS, பாஜக ஆதரவு நபர்களை நீதிபதிகளாக நியமித்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்புகளை மோடி அரசு வழங்க செய்கிறது. எனவே, கொலிஜியம் முறையை மாற்றவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்தும் வரும் 22-ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
PM மோடி ராஜினாமா செய்தாரா? பரபரப்பு

PM மோடி தனது பதவியை <<18603570>>ராஜினாமா<<>> செய்துவிட்டதாக அண்மையில் வதந்தி பரவி இருந்தது. இந்நிலையில், இன்று (டிச.21) PM பதவியில் இருந்து மோடி விலகுகிறார் எனவும் ஆட்சி மாற்றம் நிகழப் போவதாகவும் ‘Decode news’என்ற யூடியூப் தளத்தில் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB Fact Check), இந்த செய்தி முற்றிலும் தவறான தகவல் என தெரிவித்துள்ளது.
News December 21, 2025
தவெகவினர் குரைக்கும் நாய்கள் அல்ல: அருண்ராஜ்

தவெக நிர்வாகிகள் யாரும் நாய்கள் கிடையாது, குறிப்பாக குரைக்கும் நாய்கள் கிடையாது என அருண்ராஜ் கூறியுள்ளார். யாருக்கும் ஜால்ரா அடிக்கும் நாய் நானில்லை அண்ணாமலை பேசியதற்கு பதிலளித்த அவர், தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யாமல் டீசண்ட் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் என விஜய் சொல்லியிருக்கிறார் என கூறியுள்ளார். மேலும், நடிகர் விஜய்யை விட, அரசியல்வாதி விஜய் மிகவும் வலிமையானவர் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
PM மோடியை அன்போடு அழைக்கிறேன்: CM ஸ்டாலின்

இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை தேடி அலைகிறவர்களுக்கு நம் நாகரிகம் கண்ணுக்குத் தெரிவதில்லை என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நம் நாகரிகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவே பொருநை அருங்காட்சியகத்தை அமைத்திருப்பதாக கூறிய அவர், அனைவரும் அதைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பார்க்க PM மோடியையும், நிர்மலா சீதாராமனையும் அன்போடு அழைப்பதாகவும் பேசியுள்ளார்.


