News December 9, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: இன்று விசாரணை

image

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி G.R.சுவாமிநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவிட்டும் ஏற்றாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 11, 2025

BCCI கூட்டத்தில் RO – KO குறித்து ஆலோசனை

image

ரோஹித், கோலியின் ஒப்பந்தங்களை திருத்துவது பற்றி வரும் 22-ம் தேதி நடைபெறும் BCCI பொதுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான சம்பளம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஜடேஜா, பும்ராவுக்கு நிகராக சுப்மன் கில் A+ பிரிவில் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. BCCI தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வானதை அடுத்து நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

News December 11, 2025

ரூமி பொன்மொழிகள்

image

*வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். *வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.

News December 11, 2025

நீதிபதி சுவாமிநாதனுக்கு Z பாதுகாப்பு வழங்குக: கஸ்தூரி

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனை, தேசவிரோத சக்திகள் சமூக வலைதளங்களில் மிரட்டுவதாக கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அரசு Z பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் உள்ள இந்து, முஸ்லிம்களே ஒன்றும் சொல்லாத நிலையில், அரசியலுக்கு திமுக அரசு சர்ச்சையை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!