News January 5, 2026

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நாளை தீர்ப்பு!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஹைகோர்ட் மதுரை கிளை நாளை தீர்ப்பு வழங்குகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற தனிநீதிபதி G.R.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதனை எதிர்த்து TN அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைத்திருந்த நிலையில், நீதிபதிகள் ராமசந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

ஊர்க்காவல் படையினர் மூலம் புதிய திட்டம் தொடக்கம்

image

நெல்லை மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், ஊர்க்காவல் படையினரை அந்த பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தும் திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பை, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது முதல் முறையாக முழுமையாக இந்த பணிகளில் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

News January 20, 2026

அனுமதியின்றி போட்டோ எடுத்ததால் விநோத தண்டனை!

image

UAE-ல் பொது இடத்தில் மற்றொருவரை அனுமதியின்றி போட்டோ எடுத்து அதை Snapchat-ல் பதிவிட்டவருக்கு ₹6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டோ எடுத்தவருக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த வழக்கில், தனியுரிமை மீறியதை உறுதி செய்து அபராதத்துடன், போட்டோ எடுத்தவரின் Snapchat கணக்கை நீக்கவும், இண்டர்நெட்டை 6 மாதங்களுக்கு பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. பொது இடங்களில் போட்டோ எடுத்தால் இனி கொஞ்சம் உஷாரா இருங்க!

News January 20, 2026

மீண்டும் கர்ப்பமானார் நடிகை பிரியா அட்லீ ❤️❤️ PHOTOS

image

இந்திய திரையுலகில் பேமஸ் கப்பிளாக இருக்கும் இயக்குநர் அட்லீ – நடிகை பிரியா தங்களுடைய 2-வது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, 2023-ல் முதல் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமாகிய தகவலை இன்ஸ்டாவில் பகிர்ந்த பிரியா, தங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார், இதனால் தங்கள் வீடும் குடும்பமும் அழகாக மாறப்போகிறது என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!