News February 11, 2025
திருப்பரங்குன்றம் கோவில் பற்றி தெரியாத உண்மை

பரம்பொருளாகிய சிவன் குன்று வடிவில் அருளுவதால் சிவன் பரங்குன்றுநாதர் என்றும், தலம் பரங்குன்றம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன்தான். இவரை சத்தியகிரிஸ்வரர் என்று அழைக்கின்றனர். முருகன் தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால் முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு முருகன் கோவிலாக மாறிவிட்டது. மேலும், அறுபடையில் முதல் வீடும் இதுதான்.SHARE
Similar News
News March 3, 2026
மதுரை: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

மதுரை, காமராஜர் சாலையை சேர்ந்த மஞ்சுளா(45), தனியார் டிரைவிங் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் தெற்குவாசலை சேர்ந்த கேசவன்(30) ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருந்தார். மஞ்சுளா பணத்தை திருப்பி கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கேசவன், வீட்டிற்கு சென்று தோசைக்கல்லால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News March 3, 2026
மாநகர காவல் இரவு ரோந்து அதிகாரிகள்

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் மாரிச்சாமி தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் இலக்கியா வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
மதுரை : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


