News March 29, 2026
திருப்பரங்குன்றத்தில் தவெக சார்பில் நிர்மல்குமார் போட்டி

வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார். இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Similar News
News April 5, 2026
மதுரை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
News April 5, 2026
BREAKING மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 27 வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
News April 5, 2026
மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.


