News January 10, 2026
திருப்பத்தூர்: Mobile-லில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, திருப்பத்தூர் எஸ்.பி-04179-2256802, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர்: கை குழந்தையுடன் பெண் கதறல்!

பொன்னேரியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் தியாகராஜன். கணவன் மனைவி இடையே பிரச்சனை காரணமாக அகிலாவை அவரது கணவர் வீட்டில் சேர்க்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவனுடன் சேர்த்து வைக்க கோரி திருப்பத்தூர் கோர்ட்டில் அகிலா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கணவன் வீட்டின் முன் கை குழந்தையுடன் தனது 35 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
News January 25, 2026
திருப்பத்தூரில் பெண் தலை நசுங்கி பலி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் நேற்று (ஜன.24) அதே பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூருக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, கலைவாணி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கலைவாணி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 25, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன,24 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் பிணியில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகளுக்கு மேலே உள்ள எண்களை அழைக்கலாம். ஷேர் செய்யுங்க.


