News January 13, 2026
திருப்பத்தூர்: +2 போதும் மத்திய அரசில் வேலை!

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <
Similar News
News January 29, 2026
ஜோலார்பேட்டையில் சரமாரி தாக்குதல்!

ஜோலார்பேட்டை அருகே பெரியமூக்கனூர் கிராமத்தில் கோவிந்தராஜ் மற்றும் இந்திராகாந்தி குடும்பத்தினரிடையே நீண்டகாலமாக சொத்து தகராறு இருந்துள்ளது. நிலத்தை அளக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கற்களால் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த 8 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகார்களின் அடிப்படையில் 8 பேர் மீது ஜோலார்பேட்டை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
News January 29, 2026
FLASH: ஆம்பூரில் பயங்கர விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.29) அதிகாலை 5.30 மணிக்கு முன்னே சென்ற கார் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News January 29, 2026
திருப்பத்தூர்: ரத்த வெள்ளத்தில் கிடந்த குடும்பம்!

ஆம்பூரை சேர்ந்த தம்பதி தயாளன் (62), தமிழ்ச்செல்வி (62). இவர்களது மகள் இறந்து விட்ட நிலையில் மருமகன் மற்றும் 3 பேர குழந்தைகளுடன் வாழ்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து தயாளன் வீட்டுக்கு வந்த போது தமிழ்ச்செல்வி மற்றும் 3 பேர பிள்ளைகள் கைகளில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


