News August 17, 2024
திருப்பத்தூர் விவசாயிகள் பகிரங்க குற்றசாட்டு

திருப்பத்தூர் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தின் மூலம் நீர் பாசன குழாய் அமைத்து கொடுக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் பெயரில் ஆவணங்களை பெற்று கொண்டு சரியாக குழாய்களை அமைக்காமல் அமைந்தது போன்று படம் பிடித்து மோசடி செய்வதாக குற்றம் சாட்டினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் உறுதியளித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 1448 பேர் பயனடைந்தாக அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (09) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் 230 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 95 தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட 1448 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 149 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 23 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
News August 10, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 9, 2025
அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் சுதந்திர தினமான 15.08.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி உத்திரவு பிறப்பித்துள்ளார்.