News March 24, 2024
திருப்பத்தூர்: வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News April 10, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News April 10, 2025
LOAN APP மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பு துறை, சமூக வலைதள பக்கத்தில் LOAN APP மூலம் பரிவத்தனை செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற லோன் ஆப்பில் நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு, மிரட்டப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, LOAN APP மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News April 10, 2025
மருத்துவமனை ஓனர் மீது மாணவிகள் பாலியல் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் நிஷா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு செவிலியர் பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு, மருத்துவமனை ஓனர் ஜாவித் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக இன்று அம்பலூர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜாவித்திடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.