News December 12, 2025

திருப்பத்தூர்: ரோந்து பணியில் சிக்கிய பலே திருடன்!

image

நாட்டறம்பள்ளியில் போலீசார் நேற்று (டிச.11) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சலை டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது, அவர் வாணியம்பாடி பாரதிநகரை சேர்ந்த பூபாலன் (23) என்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்தது. எனவே போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

News December 12, 2025

திருப்பத்தூர்: விவசாய நிலத்தில் கிடந்த பெண் சடலத்தால் பரபரப்பு

image

திருப்பத்தூர், ஜவ்வாது மலைக்குட்பட்ட புதூர்நாடு, நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம், மனைவி சின்னக்காளி (40). இவரது கணவர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று (டிச.11) சின்னக்காளி தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.

News December 12, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!