News December 26, 2025
திருப்பத்தூர்: ராணுவர் வீட்டில் கொள்ளை முயற்சி

திருப்பத்தூர்: சிவசக்தி நகரை சேர்ந்த ராஜா (36) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம், 4 முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை CCTV மூலம் பார்த்த தீபா பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் வெளியே வந்து பார்க்க, கொள்ளையர்கள் உடனே அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
திருப்பத்தூர்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). இவர், 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
திருப்பத்தூர்: இளம் பெண்களுக்கு நேர்ந்த சோகம்!

நாட்றம்பள்ளி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த கோகிலா (18), சுபஸ்ரீ (22) இருவரும் நேற்று (டிச.28) மாலை பாலாற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றிலிருந்த பள்ளத்தில் மூழ்கி தவித்தனர். இருவரையும் குடும்பத்தினர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News December 29, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


