News August 3, 2024
திருப்பத்தூர் ராட்சத ராட்டினத்தில் 50 பேர் மீட்பு

திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை கிராமத்தில் ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டது. இதில் ராட்சத ராட்டினம் எதிர்பாராத விதமாக திடீரென்று இன்று இரவு சாய்ந்தவாறு இருந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பதறிப் போய் கத்தினர். தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக 50க்கும் மேற்பட்ட உயிர்களை காயமின்றி காப்பாற்றினர். இதையடுத்து திருப்பத்தூர் காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிகிறது.
Similar News
News November 6, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
திருப்பத்தூர்: முன்னாள் படை வீரர் குறைத்தீர்வு நாள்!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.11.2025 அன்று பிற்பகல் 2 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
திருப்பத்தூர் பெண்களின் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு, திருப்பத்தூர் காவல்துறை சார்பில் இன்று (நவ.5) ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘பெண்கள் யாரேனும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக 1091, 181 என்ற எண்ணிற்கு அழைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


