News August 5, 2025

திருப்பத்தூர் மாவட்ட போலீசார் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், ‘யாராவது வாகனம் வாங்கும் போது ஆன்லைனில் முன்பணம் கட்டினால் தான் வாகனம் தருவோம் என கூறினால் அதை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News August 6, 2025

திருப்பத்தூர்: தாசில்தார் மீது எப்படி புகார் அளிக்கலாம்?

image

திருப்பத்தூர் மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 6, 2025

திருப்பத்தூர்: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

image

திருப்பத்தூர், ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <>இந்த லிங்கில்<<>> உங்கள் புகார்களை பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்புக்கு 1967 (அ) 18004255901. ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க

News August 6, 2025

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார். நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!