News October 24, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அருகில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு இன்று (அக்.24) மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது. தொடர் மழை காரணமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
திருபத்தூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

திருப்பத்தூர்: ஆம்பூர் தாலுகா செங்கலி குப்பம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(அக்.24) இரவு 11.30 மணிக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பாக்கம் பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(20). ஹோட்டல் தொழிலாளியான இவர் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 25, 2025
திருப்பத்தூர்: தீபாவளி ஆஃபர் கேட்டு அடி, உதை!

திருப்பத்தூர்: காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜவகர்(23). இவர் ஒசூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ஓர் ஜவுளிக் கடையில் புத்தாடை வாங்கிய அவர், ஆடைக்கு தள்ளுபடி கேட்டு உரிமையாளரிடம் அதிரடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் ஜவகரை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
News October 25, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.24) இரவு முதல் விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வெளியானது. அதன்படி ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள், இரவு ரோந்து பணியில் உள்ளபோது புகைப்படத்தில் உள்ள செல்போன் எண்களை உபயோகித்து உதவி கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


