News October 29, 2025
திருப்பத்தூர்: மனைவிக்காக கணவன் விபரீத முடிவு!

ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்த் பாபு (37) ஊதுவத்தி கம்பனியில் வேலை செய்கிறார். நேற்று (அக். 28) மாலை தனது மனைவி திவ்யா இந்திரா நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டுக்கு சண்டை போட்டு சென்றுள்ளார். அவரை அழைக்க வந்த போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தனது பைக்கில் இந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News October 29, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளனர். அதில், இரவு நேரங்களில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வாகனங்களில் PARKING LIGHT- ஐ ON செய்து நிறுத்துங்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சாலை விதிகளை மதிப்போம், விபத்தினை தவிர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
News October 29, 2025
திருப்பத்தூர்: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
திருப்பத்தூர் பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நாளை மறுநாள் (31-10-2025) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள பெண்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அல்லது கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து கலந்துகொள்ளலாம்.


