News December 23, 2025

திருப்பத்தூர்: தப்பியோடிய லாரி டிரைவர் கைது

image

ஆம்பூர் தாலுகா ஜமீன் தேசிய நெடுஞ்சாலைகள் நேற்று முன்தினம் (டிச.21) மாலை உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி, சௌந்தர்ராஜன் (24) மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சௌந்தர்ராஜன் உயிரிழந்தார். இதில் தப்பியோடிய லாரி டிரைவர் கல்கத்தாவை சேர்ந்த தேவதாஸ் (22) என்பது தெரியவந்தது. இதனடிப்படையில் ஆம்பூர் போலீசார் நேற்று இரவு (டிச.22) லாரி டிரைவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 23, 2025

திருப்பத்தூரில் தூக்கில் தொங்கிய தம்பதி

image

ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சகாதேவன் (50) மற்றும் மேரி (எ) தேவி (45). இத்தம்பதி இன்று (டிச.23) அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

திருப்பத்தூர் மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<> கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!