News March 1, 2026
திருப்பத்தூர்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 1, 2026
திருப்பத்தூர்: 10 அடி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட உயிர்!

திருப்பத்தூர் நகராட்சி ஆதிசக்தி நகர் பகுதியில், நேற்று இரவு மஹாவிஷ்ணு என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டினை காயமின்றி பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் இந்த துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
News March 1, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.28 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News February 28, 2026
திருப்பத்தூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருப்பத்தூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க


