News January 13, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 4, 2026

கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதனூர் ஒன்றியத்தில் உள்ள வடசேரி மற்றும் 17 இதர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை நாளை (பிப் .5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நாளை காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 4, 2026

காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி!

image

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த மெய்யழகனும், அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இன்று (பிப்.4) ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

News February 4, 2026

திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு!

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் செய்தியை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!