News November 9, 2025
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் போது அதிலுள்ள storage space களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்துச் செல்ல வேண்டாம்”. எச்சரிக்கையாக இருக்கவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை சமூக ஊடகங்கள் வாயிலாக எச்சரித்துள்ளது.
Similar News
News November 9, 2025
திருப்பத்தூர்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.
News November 9, 2025
திருப்பத்தூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் நகையை பறித்தவர் கைது

விஷமங்கலம் பகுதியை சேர்ந்த நதியா எனும் பெண் ரயிலில் நேற்று பயணம் செய்யும்போது அவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் 1 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். அந்த நபரின் மீது ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட குற்றவாளி சதிஷ், பங்காரு பேட் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இன்று (நவ-09) அவரை சிறையில் அடைத்தனர்.


