News March 26, 2025
திருப்பத்தூர்: ஊரை விட்டு 10 குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் மூன்று குடும்பங்களை 10 நாட்களாக ஊரை விட்டு ஒதுக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் திருவிழாவின்போது கோயில் அருகில் கூட வரக்கூடாது வந்தால் என்ன நடக்கும் தெரியாது என மிரட்டும் நிர்வாகிகள். குடிநீர் எடுக்க கூட செல்ல முடியாமல் அவதிப்படுவதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு.
Similar News
News August 9, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று (ஆக .09) காலை 10 மணியளவில் திருப்பத்தூர்- குரும்பர் தெரு, உடைய முத்தூர், நாட்றம்பள்ளி- கோனாபட்டு, வாணியம்பாடி- கிருஷ்ணாபுரம், ஆம்பூர்- பச்சகுப்பம் ஆகிய நியாய விலை கடைகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். ஷேர் பண்ணுங்க
News August 9, 2025
BREAKING: திருப்பத்தூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) கனமழை காரணமாக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விடுமுறை என்பதை தெரியப்படுத்துங்கள்.
News August 9, 2025
திருப்பத்தூரில் இன்று கனமழை வெளுக்கும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.