News November 17, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (நவ.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

திருப்பத்தூர் வாக்காளர் திருத்தப் பணிகள் ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 050–திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கான வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு பதிவுகளை BLO செயலியில் புதுப்பிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திருமதி க.சிவசௌந்திரவல்லி (நவ.16) அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 16, 2025

நரியம்பட்டு: ஆட்டோ கவிழ்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்!

image

உமராபாத் பகுதியை சேர்ந்த நிஷாத் அகமத் வயது (65) கூலி தொழிலாளி. நேற்று (நவம்பர்-15) நரியம்பட்டு ஊராட்சி ராமச்சந்திரபுரம் பகுதியில் ஆட்டோவில் வந்து போது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்தில் உயர் இழந்தார். இதனை அடுத்து ஆட்டோ டிரைவர் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த முருகேசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 16, 2025

திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலனுக்காக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ-16) காவல்துறை வலைதள பக்கத்தில். “வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்” என அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!