News February 25, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.24) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர்!
Similar News
News February 27, 2026
திருப்பத்தூர்: திமுக விருப்ப மனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சார்ந்த எஸ்.சித்ரா வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கான விருப்ப மனுவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (பிப்ரவரி 26) தாக்கல் செய்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர். இவர் வாணியம்பாடி திமுக 6 வது வார்டு நகரமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வாணியம்பாடி அதிமுக வசம் உள்ளது.
News February 27, 2026
மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் படுகாயம்

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லகுண்டா சேர்ந்தவர் சாந்த மூர்த்தி இவர் இன்று (பிப்.26) நாட்றம்பள்ளியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னகம்மியம்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 27, 2026
வாணியம்பாடியில் கொடூர கொலை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கும் இவரது மகனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரத்தில் உலகநாதனை அவரது மகன் ஹரிஷ் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் அருகிலேயே படுத்துறங்கியுள்ளார். உலகநாதனின் உடலை மீட்ட வாணியம்பாடி நகர காவல்துறையினர் ஹரிஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


