News February 25, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.24) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர்!
Similar News
News February 25, 2026
ஆம்பூரில் கொடூரம்; சரமாரி அரிவாள் வெட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பொன் நகரம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி கோபி (40). இவரது மச்சான் தமிழ் செல்வன் (27). இந்நிலையில், இருவருக்கும் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு குடிபோதையில் கோபியை தமிழ்ச்செல்வன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்தேன் கோபி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 25, 2026
ஆம்பூர்: மனைவின் மண்டையை உடைத்த கணவன்!

திருப்பத்தூர்: ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கடம்பூர் ஊராட்சி பூஞ்சோலை பகுதியில் நேற்று(பிப்.24) பிரசாந்த்(24) – வினோதினி(22) எனும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் மனைவியின் மண்டை உடைந்தது. அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 25, 2026
திருப்பத்தூர்: பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு அடி உதை

ஜோலார்பேட்டை அடுத்த புத்தகரம் சேர்ந்த லட்சுமி என்பவர் நேற்று (பிப்.24) தனது மொபட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அடியத்தூர் கல்லு கடை அருகே முன் விரோதம் காரணமாக ஒருவர் அடித்து உதைத்து கடுமையக தாக்கி உள்ளார். இதனால் படுகாயமடைந்த லட்சுமி அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


