News September 3, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News September 5, 2025
‘திருப்பத்தூர்’ பெயர் காரணம் தெரியுமா?

திருப்பத்தூர் பெயருக்கு பின்னால் பல காரணங்களுக்கள் சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் இதற்கு “திருப்பத்தூர்” என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், திருவனபுரம் என்று அழைக்கப்பட்டு வந்ததை விஜயநகர மன்னர்கள் திருப்பத்தூர் என மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
உங்களைப்போல் உங்கள் நண்பர்களும் தெரிந்துக்கொள்ள இதனை ஷேர் பண்ணுங்க!
News September 5, 2025
திருப்பத்தூர் பெண்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9025120960) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு
News September 5, 2025
திருப்பத்தூர்: முன் விரோத சண்டையில் ஒருவர் கைது

ஆம்பூர் தாலுகா மோதகப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயது (28) கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது அதே பகுதியை சேர்ந்த துர்கேஷ் வயது (20) முன் விரோதம் காரணமாக கடந்த 1 தேதி சரமாரியா தாக்கியதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உமாநாத் போலீசார் வழக்கு பதிவு செய்து (இன்று காலை செப் 5) துர்கேஷை கைது செய்தனர்.