News September 4, 2025

திருப்பத்தூர்: இப்படி ஒரு அதிசய குளமா…!

image

திருப்பத்தூர், ஆண்டிப்பனுரில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோயில் குளத்தில் வேண்டுதலை நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தை குளத்தில் போட்டால் உடனடியாக மேலே வந்தால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறுமாம். மாறாகத் தாமதமாக மேலே வந்தால் தாங்கள் வேண்டுதலும் தாமதமாகத்தான் நிறைவேறுமாம். ஒருவேளை வாழைப்பழத் துண்டுகள் மேலே வராமல் உள்ளே சென்றுவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறாது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News September 4, 2025

திருப்பத்தூர் நகர் பகுதியில் 6 ஆம் தேதி மின்நிறுத்தம்

image

திருப்பத்தூர் மின்பகிர்மானம் 110/33 கி.வோ துணை மின்நிலையத்திற்குட்பட்ட திருப்பத்தூர் டவுன், ஹவுசிங்போர்டு, ஆசிரியர்நகர் திரியாலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 06.09.25 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகாரணமாக காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் செயற்பொறியாளர் சம்பத்து அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவுறுத்தினார்.

News September 4, 2025

திருப்பத்தூர்: Ration Card வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே (1800-425-5901) அழைத்து புகார் அளிக்கலாம். <>இந்த லிங்கிலும்<<>> புகார் அளிக்கலாம்

News September 4, 2025

திருப்பத்தூர்: 28 சவரன் நகை கொள்ளை

image

ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் மாணிக்கம் மற்றும் மனைவி சர்மிளா வசித்து வருகின்றனர். சர்மிளா நேற்று (செப்3) தனது வீட்டில் அலமாரியில் வைத்திருந்த தங்க நகையை பார்த்த போது மூன்று மாதங்களுக்கு முன்பு வைத்து இருந்த 28 சவரன் காணவில்லை. இதனால் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!