News July 28, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த உமா என்பவர் 2019 ஆண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கோரிய நிலையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே இது குறித்து வழக்கு தொடர்ந்த அவருக்கு அப்போதைய ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியிருந்தது. ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காததால் தற்போதைய ஆட்சியர் ஆக 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News March 9, 2026

ஜலகனூரில் கிரிக்கெட் விளையாட்டில் பயங்கரம்

image

குரிசிலாப்பட்டு அடுத்த ஜலகனூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில், ஏழுமலை என்ற வாலிபரை ஒரு கும்பல் தாக்கியது. இதனைத் தடுத்த அவரது தாயாரும் படுகாயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் இன்று (மார்ச்-9) சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.<<>>gov.in இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

திருப்பத்தூர்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!