News August 15, 2024
திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறும் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் ஏராளமான போலீசார், விழா நடைபெறும் விளையாட்டுத் திடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 11, 2025
திருப்பத்தூர்: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க <
News August 11, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி 13 ,14 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் கொடிகள் மற்றும் பேனர்கள் பறக்கும் பலூன்கள் என திருப்பத்தூர் நகரை திருவிழா போல் தயார் படுத்தி வருகின்றனர்.
News August 10, 2025
திருப்பத்தூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.