News January 2, 2025

திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் 3 விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் மீது மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்தது. ஆம்பூர் அருகே மாராப்பட்டு பகுதியில் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து மற்றும் நாட்டறம்பள்ளி என 3 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஒருவர் உயிரிழந்தார். புத்தாண்டு தினத்தில் விபத்து ஏற்பட்டது குறித்து மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Similar News

News February 2, 2026

திருப்பத்தூர்: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

image

திருப்பத்தூர் மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. திருப்பத்தூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

திருப்பத்தூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திருப்பத்தூர் அருகே துடிதுடித்து பலி

image

நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி டோல்கேட் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோவையில் இருந்து சென்னைக்கு கோழி இறைச்சி ஏற்றுக்கொண்டு சென்ற மினி வேன் எதிரே சென்ற லாரி மீது இடித்ததில் மினி வேனில் கிளீனராக வேலை செய்த கோவையைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!