News January 2, 2025
திருப்பத்தூரில் நாளை முதல் பொங்கல் பரிசுக்கு டோக்கன்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (02.01.2025) நடைப்பெற்றது. இதில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன் நாளை முதல் (03.01.2025) விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் இணை இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News November 3, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.02) இரவு முதல் இன்று (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
திருப்பத்தூர்: மேம்பால சுவர் மீது மோதி விபத்து!

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஷாஹித் என்பவர் இன்று (02) காரில் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
News November 2, 2025
திருப்பத்தூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<


