News August 21, 2025
திருப்பத்தூரில் நான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நேற்று “நான் முதல்வன் – உயர்வுக்குப் படி” திட்டம் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வருவாய் கோட்டாட்சியர்கள் வரதராஜன், அஜிதா பேகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Similar News
News August 21, 2025
செல்போன்களை குழந்தைகளிடம் அளிக்க வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைத்துவைத்துள்ள செல்போன்களை குழந்தைகளிடம் அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பணம் இழக்க நேரிடும் என்றும், அவ்வாறு பணம் இழந்தால், உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 21, 2025
திருப்பத்தூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
திருப்பத்தூர்: LIC-யில் வேலை, ரூ.1 லட்சம் சம்பளம்!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <