News March 24, 2024
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நடுக்கம் தீர்த்த பெருமான் எனும் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் உருத்திர பாத திருநாள் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Similar News
News September 5, 2025
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச போட்டித் தேர்வு

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா இலவச முழு மாதிரி தேர்வு நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தப் தேர்வுக்கு இணையத்தின் வழியாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். ஆகையால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த தேர்வை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
News September 5, 2025
தஞ்சை: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

இன்று செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை மிலாடி நபி அரசு விடுமுறை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான கடைகளும் இயங்காது என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இதனை மீறி சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்.