News April 22, 2025
திருபத்தூரில் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சமூக வலைதள பக்கத்தில் போதைப்பொருட்களை பொதுமக்கள் மாணவச் செல்வங்கள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற தீய செயல்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் இதே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மக்களின் நலனில் நமது திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் என்று தெரிவித்துள்ளது.
Similar News
News August 5, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையின் அளவு வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், வாணியம்பாடி, திருப்பத்தூர், கேத்தாண்டபட்டி, ஆம்பூர் ஆகிய பகுதிகளை நேற்று மாலை பெய்த கனமழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆலங்காயம் வனப்பகுதியில் 78 மி.மீட்டர் மலையும், வாணியம்பாடி பகுதியில் 49 மி.மீட்டர் மழையும், நாட்றம்பள்ளி 15 மி.மி மழையும் பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 5, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூரில் பெற்றோர்களை இழந்து உறவினர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ரூ2000 உதவித்தொகை பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் அல்லது மக்கள் குறைதீர்வு கூட்டம், ’உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 5, 2025
திருப்பத்தூரில் 3 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தி ஆணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பலூர் காவல் நிலையம் திருப்பத்தூர் உட்கோட்டத்திற்கு ட்பட்ட ஏலகிரி மலை, குரிசிலாப்பட்டு காவல் நிலையம் ஆகிய 3 காவல் நிலையங்களும் காவல் ஆய்வாளர் நிலைக்கு தரம் உயர்த்தியும் தமிழகத்தில் 280 காவல் நிலையங்களையும் தரம் உயர்த்தி தமிழக அரசு காவல்துறை துணை செயலாளர் திராஜ் குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.