News February 24, 2026

திருநெல்வேலி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

Similar News

News February 27, 2026

நெல்லை திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

image

நெல்லை மாநகராட்சி முன்னாள் மாவட்ட உறுப்பினரும், மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகியுமான தவுலத் நேற்று மாலை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். புதிதாக கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாவட்ட உறுப்பினரை எம்எல்ஏ அப்துல் வகாப் வரவேற்றார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News February 27, 2026

திருநெல்வேலி: 2 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி

image

நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணம் தொடர்பான தகராறில், ரவுடி பேச்சிமுத்து (37) உள்ளிட்டோர் அரிவாளால் ஊழியர் சந்திரன் (49) மற்றும் டிரைவர் தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை வெட்டிவிட்டு தப்பினர். பெருமாள்புரம் போலீஸ் நிலையம் விசாரணையில் பேச்சிமுத்து மீது முன்கூட்டியே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தலைமறைவான 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News February 27, 2026

நெல்லையப்பர் கோயிலில் அனுமதி இல்லை – காரணம் இதோ!

image

வரும் மார்ச்.3ம் தேதி சந்திர கிரகணம் நடக்கிறது. அன்று மாலை 3.08 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி காலை 6.48 மணிக்கு நிறைவு பெறுகிறது. நெல்லையப்பர் கோயிலில் அன்று காலை பூஜைகள் நடந்த பின்னர் மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

error: Content is protected !!