News September 4, 2025
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

Grindr போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மோசடி செய்பவர்கள் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம், பொருட்களை வழிப்பறி செய்கின்றனர். பொதுமக்கள் இதில் எச்சரிக்கையாக இருக்கவும், இத்தகைய குற்றங்களில் பாதிக்கப்பட்டால் 1930 கட்டணமில்லா எண் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். *ஷேர் பண்ணுங்க
Similar News
News September 5, 2025
நெல்லைக்கு மேலும் ஒரு பெருமை!

குலசையில் 2வது ஏவுதளம் அமைக்கும் நிலையில், பாளையங்கோட்டையில் புதிய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.7.12 கோடி செலவில் டெண்டர் கோரி விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது .இங்கே கட்டுப்பாட்டு மையம் அமைத்து அதில் விண்கலன்களை கண்காணிப்பது, கட்டளைகளை பிறப்பிப்பது போன்ற முக்கிய பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. நெல்லைக்கு மேலும் பெருமை சேர்க்கும் இந்த செய்தியை ஷேர் செய்யுங்க
News September 5, 2025
திருநெல்வேலி மாநகரத்தில் 15 நாட்களுக்கு தடை

திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரத்தின் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் கூட்டங்கள் நடத்துவதற்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்படுவதாக திருநெல்வேலி மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
News September 5, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!