News February 10, 2026
திருநெல்வேலி: தொழிலாளி வெட்டிக் கொலை!

மூன்றடைப்பு, பாணாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி(50), இவரது மனைவி, மகன் கேரளாவில் தங்கி வடை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் 6 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த இசக்கிபாண்டி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இசக்கிபாண்டி சடலமாக கிடந்தார். மூன்றடைப்பு போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
திருநெல்வேலி: ரூ.3 லட்சத்தை காப்பாற்றிய அரிசி டப்பா

கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டை பூட்டி வெளியே சென்ற போது இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்துள்ளனர். அங்கு பீரோவில் இருந்த ரூ.30,000 திருடு போனது. அதே நேரத்தில் அரிசி டப்பாவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 16, 2026
திருநெல்வேலி: போலீஸ் வீட்டில் திருடிய சிறுவன் கைது

விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் ஞானசுந்தர்(38) என்பவரது பொன்மா நகரில் உள்ள வீட்டில் ரொக்க பணம், பொருட்கள் கொள்ளை போனது. இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தெற்கு பாப்பான்குளம் ஜெயக்குமார்(27) கருத்தப்பிள்ளையூர் வினித்(22), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து பணம், பொருட்களை மீட்டனர்.
News February 15, 2026
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.


