News February 28, 2026
திருநெல்வேலி தொகுதியில் அறிவிப்புக்கு முன்னே பிரச்சாரம்

சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, பாஜகவினரால் “நயினார் நாகேந்திரன்—தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.
Similar News
News March 5, 2026
நெல்லை: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த மாரியப்பன்(19) என்பவர் புகழேந்தி தெருவில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 220 கிராம் எடை உள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.
News March 5, 2026
திருநெல்வேலி: இன்று புதிய அரசு மருத்துவமனை திறப்பு

திருநெல்வேலி வள்ளியூரில், அதிநவீன அறுவை சிகிச்சை கூடம், EGC, CT SCAN, X-RAY உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.30 கோடி மதிப்பில், அரசு தலைமை மருத்துவமனை, புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை, இன்று (மார்ச்.05) மாலை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறக்கவுள்ள நிலையில், நேற்று(மார்ச். 4) காலை, சபாநாயகர் அப்பாவு, மாவட்டஆட்சியர் சுகுமார் ஆகியோர் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News March 5, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.4) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் வினோத் சாந்தாராம் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


