News August 7, 2024
திருநெல்வேலி – கொல்கத்தா சிறப்பு ரயில் நீட்டிப்பு

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
திருமங்கலம் கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கொக்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சௌந்தரபாண்டி (54). இவர், செக்கானூரணி பகுதியில் உள்ள திருமங்கலம் கால்வாயில் சனிக்கிழமை தவறி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
இன்று நள்ளிரவு முதல் மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்ட பணிக்காக வைகை தென்கரை சாலையில் பில்லர் மற்றும் இணைப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று டிச.15 நள்ளிரவு முதல் கட்டுமான பணி முடிவடையும் வரை, வைகை தென்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம், இதன்படி வைகை வடகரை சாலைக்கு சென்று இடது புறம் திரும்பி தேனி ஆனந்தம் சந்திப்பு வழியாகவோ செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News December 15, 2025
இன்று நள்ளிரவு முதல் மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்ட பணிக்காக வைகை தென்கரை சாலையில் பில்லர் மற்றும் இணைப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று டிச.15 நள்ளிரவு முதல் கட்டுமான பணி முடிவடையும் வரை, வைகை தென்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம், இதன்படி வைகை வடகரை சாலைக்கு சென்று இடது புறம் திரும்பி தேனி ஆனந்தம் சந்திப்பு வழியாகவோ செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


