News January 28, 2026
திருநெல்வேலி: ஆட்டோ மோதியதில் வாலிபர் பலி

நெல்லை மாவட்டம் விகே புரம் வடக்கு கார் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் இவர் மகன் பேச்சி சொர்ணராஜ். இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் நேற்று விக்கிரமசிங்கபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பேச்சி சொர்ணாராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News January 29, 2026
நெல்லை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News January 29, 2026
நெல்லை மக்களே, இந்த எண்கள் முக்கியம்! SAVE பண்ணுங்க..

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News January 29, 2026
நெல்லை: பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (60). இவர் தனியார் பல் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். டவுன் பகுதி சாலையில் நடந்து சென்ற போது பைக் மோதி படுகாயமடைந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


