News May 10, 2024
திருநெல்வேலியில் 116 பள்ளிகள் அசத்தல்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டம் 93.04% தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்வில் மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நெல்லையில் 25 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 116 பள்ளிகள் 100/100 தேர்ச்சி பெற்று சென்டம் வாங்கி அசத்தி உள்ளனர்.
Similar News
News August 13, 2025
நெல்லையப்பர் கோவில் விருந்துக்கு அழைப்பு

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற (ஆக.15) வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் பொது விருந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர், கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பொதுமக்கள் பங்கேற்க கோயில் செயல் அலுவலர் இசக்கியப்பன் அழைத்துள்ளார்
News August 13, 2025
BREAKING: கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் உறவினர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை மகன் இருவர் கைதான நிலையில் மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ள ஜெயபாலன் ஆகிய மூவரும் உடற் பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
News August 13, 2025
நெல்லை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடை கள் (டாஸ்மாக்) இம்மாதம் 15ம் தேதி மூடப்படும் என ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படுவதாக தெரிவித்தார்.