News January 7, 2025

திருநங்கையர்களில் ஒருவருக்கு விருது!

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு திருநங்கையர்களில், சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு, முன்மாதிரி விருது வழங்கப்படும். மேலும் ரூ.1 லட்சம்  காசோலை வழங்கப்பட உள்ளது. திருங்கையர் தினமான ஏப்ரல்-15 அன்று, வழங்குவதற்கு தகுதியான திருநங்கைகள், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, விருதிற்கான விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 17, 2026

கோவை: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<> இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 1800-599-5950 அழைக்கவும். இத்தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க.

News February 17, 2026

உக்கடம் அருகே விபத்து: இளைஞர் பலி

image

நெல்லையைச் சேர்ந்த மாடசாமி(25) கோவை-உக்கடத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று விட்டு தனது பைக்கில் வீடு திரும்பும் போது உக்கடம் பேருந்து நிலையம் அருகே விபத்தில் சிக்கினார். பின், கோவை ஜிஹெச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 17, 2026

மதுக்கரை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு

image

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பிரிவு மொடமாத்தி சுற்று பகுதியில் இன்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா விவசாய நிலத்தில் முள் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!