News June 14, 2024

திருநங்கைகளுக்கு குறை தீர்வு கூட்டம் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 21 காலை 10 மணி அளவில் திருநங்கை மற்றும் திரு நம்பிகளுக்கான சிறப்பு முகாமானது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கிறது. திருநங்கைகளுக்கான ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட மாவட்ட சமூக நல அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்

Similar News

News March 1, 2026

ராணிப்பேட்டை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

‘திராவிட சூரியனே!’ – முதல்வருக்கு ஆர்.காந்தி உத்வேக வாழ்த்து

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை (மார்ச்.1) முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். “திராவிட சூரியனே!” எனப் புகழ்ந்துரைத்த அவர், முதல்வர் மக்கள் நலன் கருதி நீண்ட காலம் சேவை செய்ய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார். கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாகத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News March 1, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக்.

error: Content is protected !!