News December 31, 2025

திருத்தணி கொடூரத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது: பா.ரஞ்சித்

image

திருத்தணியில் நடந்த கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் எனவும், வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 31, 2025

2026-ல் இந்தியா, பாக்., இடையே போர்?

image

2026-ல் IND, PAK இடையே மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக US-ஐ சேர்ந்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இது PAK-ல் அதிகரிக்கும் பயங்கரவாத செயல்களால் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரும், பதட்டம் நிலவுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இருநாடுகளும் ஆயுதக் குவிப்பை துரிதப்படுத்துவது கவலைக்குரிய விஷயம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 31, 2025

டிசம்பர் 31: வரலாற்றில் இன்று

image

*1600 – கிழக்கு இந்திய கம்பெனி தொடக்கம்
*1910 – நாடக கலைஞர் டி.எஸ்.துரைராஜ் பிறந்தநாள்
*1984 – ராஜீவ் காந்தி இந்திய பிரதமரானார்
*1989 – நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்
*1999 – 3 தீவிரவாதிகள் விடுக்கப்பட்டதை அடுத்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814-ல் இருந்த 190 பணயக்கைதிகள் மீட்பு

News December 31, 2025

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: EPS

image

அதிமுகவில் கடுமையாக உழைப்பவர்களுக்கு வீடு தேடி வந்து பதவி தரப்படும் என EPS தெரிவித்துள்ளார். திமுகவை ஒரு கார்ப்பரேட் கம்பெனி என சாடிய அவர், அக்கட்சியில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என கூறியுள்ளார். கருணாநிதியின் குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி வாழ்வதாகவும், அவர்களது குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலுக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பேசியுள்ளார்.

error: Content is protected !!