News August 1, 2024

திருத்தணி அருகே 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

திருத்தணி தெக்கலூர் ஊராட்சியை சேர்ந்த ராமாபுரம் இருளர் காலனியில் வசிப்பவர் கண்ணையன்-நந்தினி தம்பதியினர். இவர்களின் 2 வயது ஆண் குழந்தை உறவினர் வீட்டில் விட்டு கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். உறவினர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாததால் தேடிய போது அருகில் உள்ள ஓடையில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 7, 2025

ஆவடியில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்

image

ஆவடி மாநகராட்சி, ப்ளூ க்ராஸ் ஆப் இந்தியா மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, நாய்களுக்கு இலவச தடுப்பூசி & மருத்துவ முகாமை இன்று (செப்.,7) நடத்துகிறது. இந்த முகாமானது திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு மண்டல வரி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் மூலம் ரேபிஸ் பரவுவதை தடுக்க இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

News September 7, 2025

திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செப்.,6) இரவு 10 மணி முதல் இன்று (செப்.,7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

பூந்தமல்லியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்

image

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏ.வி.எல் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.6) நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

error: Content is protected !!