News September 13, 2024
திருத்தணியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி

திருத்தணியில் கடந்த வெள்ளியன்று நடந்த தீ விபத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் குழந்தைகளின் தாயார் இறந்தனர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப தலைவர் பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ விபத்தில் பலியானது. அப்பகுதி மக்கள் இடையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
Similar News
News November 14, 2025
ஆவடி பகுதியில் மருத்துவ முகாம் அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியில் முதல்வர் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நாளை (நவ.15) பட்டாபிராம் சத்திரம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. பொதுமக்களின் நலனை முன்னிட்டு 17 துறைகளில் 43 மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. முகாம் மூலம் தேவையான சிகிச்சைகளை இலவசமாக பெற அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
News November 14, 2025
திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27667070) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
திருவள்ளூர்: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்!

செங்குன்றம் அடுத்த புழல் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டின் முன்பு கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் முதியவர் பரதராமன் (61) என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குமரவேல் மற்றும் அவரின் மாமா அருணகிரி ஆகியோர் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் பொன்னேரி நீதிமன்றம் நேற்று (நவ.13) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


