News August 11, 2025

திருத்தங்கல் அரசு பள்ளியில் மோதல்

image

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் சகமானவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிய வைத்தனர். இதே பள்ளியில் கடந்த மாதம் போதையில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 4, 2025

விருதுநகர்: 9 வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு

image

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் ஆய்வு செய்து விதிகளை மீறி சென்ற மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு.

News November 4, 2025

விருதுநகர்: B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 4, 2025

சிவகாசியில் ரூ.10 ஆயிரம் கோடி இலக்கு

image

சிவகாசியில் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி பாதிப்பால் பட்டாசுக்கான தட்டுப்பாடு நிலவியது. எனவே பட்டாசு தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்தாண்டு விரைவாகவே பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடந்த நிலையில் வரும் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி இலக்காக கொண்டு உற்பத்தியை துவக்கியுள்ளனர்.

error: Content is protected !!