News December 31, 2025
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 4 பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 2, 2026
செங்கை: லாரி டயரில் சிக்கி துடிதுடித்து பலி!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பகவதி(22), நேற்று முன் தினம் இரவு ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக பைக்கில் கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கண்டிகையை அடுத்த வெங்கம்பாக்கம் சந்திப்பு அருகே சென்ற போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை வேகமாக முந்த நினைத்த போது, லாரி சக்கரத்தில் தடுமாறி விழுந்து, இழுத்துச் செல்லப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News January 2, 2026
அணு ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குனர் பதவியேற்பு

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) இயக்குநராக சி.ஜி.கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகுமார் பிள்ளை நேற்று புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ளார்.இந்த தலைமைத்துவ மாற்றம் இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் மையத்தை இணைக்கும் என தெரிவிக்கிறது. வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்ற ஸ்ரீகுமார் பிள்ளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
News January 2, 2026
அணு ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குனர் பதவியேற்பு

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) இயக்குநராக சி.ஜி.கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகுமார் பிள்ளை நேற்று புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ளார்.இந்த தலைமைத்துவ மாற்றம் இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் மையத்தை இணைக்கும் என தெரிவிக்கிறது. வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்ற ஸ்ரீகுமார் பிள்ளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.


